அம்மன் கவசத்தில் தோன்றும் திருநீறு
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியில் உள்ள செளடம்மன் கோவிலில் அம்மன் அணிந்திருக்கும் வெள்ளி கவசத்தில் இருந்து.திருநீறு தோன்றுகிறது.
2013 செப்டம்பர் மாதம் சீரப்பள்ளியில் உள்ள செளடம்மன் கோவிலில் உள்ள செளடம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்திருக்கிறார்கள். அன்று இரவு கோவில் பூட்டும் சமயத்தில் கவசம் முழுவதும் திருநீறு படிந்து இருக்கிறது.
அது ஏதோ வெள்ளையாக ஏதோ ஒட்டியிருக்கிறதே என்று அதை துடைத்து விட்டு இருக்கிறார்கள். மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது மீண்டும் அதே போன்று அதிகமாக படிந்து இருக்கிறது. அதை சதாரணமாக எடுத்துக் கொண்டு மீண்டும் துடைத்து விட்டு இருக்கிறார்கள். மறுபடியும் 2 மணி நேரத்தில் அதேபோல் சிலை முழுவதும் படிந்திருக்கிறது. மறுபடியும், மறுபடியும் துடைத்து விட மீண்டும், மீண்டும் திரு நீறுபடிய அதன் பின்தான் மற்றவர்களுக்கு தெரியபடுத்தி இருக்கிறார்கள்.
சுற்றுபட்ட கிராமங்களில் இருந்து. இதை பார்க்க மக்கள் சாரி,சாரியாக வந்து பார்த்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
அதன் புகைப்படம்