தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 ஆகஸ்ட், 2014

தேவாங்கர்களின் திவ்யதேசங்கள்





தேவாங்கராக உள்ள அனைவரும் ஒரு முறையாவது  தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் .

.1 ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன மூர்த்தி கோவில்.
2 மொதனூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்.
3. நந்தவரம் செளடேஸ்வரி தேவி கோவில்
4. கங்காசாகர் கபிலேஸ்வரர் ஆலயம்
5. நேபாளத்தில் பசுபதிநாத் கோவில்.
6. மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்.
7. ஹம்பி ஹேமகூட காயத்ரி பீடம்.
8. ஸ்ரீ காயத்ரி பீடம் , திருமூர்த்திமலை.
9. உஜ்ஜைன் மகாகாளேஸ்வரர் ஆலயம்.

தேவாங்கர்களுக்கு இந்த ஒன்பது ஸ்தலங்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.

28 ஜூன், 2014

இறந்தவர்களுடன் [ஆவிகளுடன்] பேசிய அனுபவம்

                                                                                 


நண்பர்களே! இறந்தவர்களுடன் தொடர்பு கொண்டு நான் பேசிய என் அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உடன் வேலை செய்த  நண்பர் ஒருவர் இப்படி தொடர்பு கொண்டு பேசியதை அறிந்து. அவர் மூலம் கற்று கொண்டேன்.

எனக்கு முதலில் இதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. அவர் பொய் சொல்கிறார் என்று நிருபிக்கவே நான் முதலில் அவருடன் பேச உட்கார்ந்தேன். அவர் சொன்னது போலவே நகர்ந்தது. அப்படியும் அவர் தானே நகர்த்துகிறார் என்று  கூறி அவரிடம் நம்ப முடியாது என்று சொல்லி விட்டேன். 

24 மே, 2014

கலசம், பூர்ண கும்பம் என்றால் என்ன?

                                                                     

பாரம்பரிய பழக்க வழக்கத்தின் காரணங்களை அறிவோம்!!

கலசம் என்பது என்ன? மண்அல்லது செம்பு, பித்தளை, தாமிரம்
போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு -
சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது.

இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில்
ஒரு தேங்காய் வைக்கப்படும்.வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள
நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட்
வடிவத்தை உரு வாக்கும் வகையில்நுணுக்கமாகக் கட்டப்படுகிறது.
பானையின் மேல் அழகான வடிவங்கள்வரையப்படுவதும் உண்டு. இந்தப்
பானை கலசம் என்றழைக்கப்படுகிறது.

இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும்.
இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது. 

5 ஜனவரி, 2014

முன் வினைபயன் மற்றும் மறுவாழ்வு



மறுஉலக வாழ்வு பற்றிய என் கருத்துக்களை நான் வெளியிட்ட பின்னர், பல கேள்விகள் என் முன் வைக்கப்பட்டன. இந்த கட்டுரையில் அதற்கான பதில்களை தர முயற்சித்துள்ளேன். இதுவே இந்த தலைப்பு குறித்தான இறுதியான கட்டுரையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். காரணம், நான் இஸ்லாம் குறித்தான தலைப்புகளுக்கே செல்ல விரும்புகிறேன்.
முஸ்லிம்களும் மறுஉலக வாழ்வு உண்டு என கூறுகின்றனர். நாம் அவர்களை ஒத்துக் கொள்வதில்லை, சரிதானே? நம்மைப் பொறுத்தவரை அது எந்த அடிப்படையையும் கொண்ட ஒன்றில்லை.
மறுஉலக வாழ்வு இருக்கிறது என்று நிருபிப்பதற்கு போதுமான அளவு சாட்சியங்கள் உள்ளன.   “கடவுளையும் மறுஉலக வாழ்வையும் இப்போது ஏன் நான் நம்புகிறேன்என்ற என் கட்டுரையில், சரிபார்த்து அறிந்துகொள்ளக்கூடிய NDE (இறப்பின் அருகே அனுபவிக்கும் அனுபவம்) அனுபவங்களை தந்துள்ளேன். நான் எப்போதெல்லாம் அது போன்ற காணொளிகளை மேலும் காண்கிறேனோ, அப்போதெல்லாம் மேற்கொண்டு அதை இங்கே இணைத்திடுவேன். சாட்சியங்கள் மீது தான் அறிவியல் கட்டப்பட்டுள்ளது. சாட்சியங்களை மறுதலித்தால் நாம் அறிவியலை மறுதலிக்கிறோம்.

2 ஜனவரி, 2014

மருத்துவ காப்பீடு Health Insurance


                                                                           

நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது மெடிக்கல் இன்சூரன்ஸ் (மருத்துவ காப்பீடு) ப்ரீமியம் கட்டுவதை ஒரு வீண் செலவாகவே கருதிக் கொண்டிருக்கிறோம்.

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றைய நிலையில் எவ்வளவு முக்கியம்?  இன்று மருத்துவமனைகள் அனைத்துமே நம் பயத்தை பயன்படுத்தி பணம் பிடுங்கும் பகல் கொள்ளை காடுகளாக மாறிவிட்ட போது, நாமும் அதற்கேற்ப நம்மை உஷாராக வைத்துக்கொள்ள வேண்டாமா?

27 டிசம்பர், 2013

தேவாங்கர்களின் புகழ் பரப்பும் ஊடகங்கள்


தேவாங்கர்களின் மாத இதழ்களும், வலை தளங்களின் பெயர்களும், தேவாங்கர் பேஸ் புக் குரூப் [Face Book Group] பெயர்களும், தேவாங்கர் திருமண தகவல் மைய வலைதள பெயர்களும் மற்றும் முக்கிய வலைதள பெயர்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாத இதழ்கள்

1. ஆதி  ஸ்ரீ சௌடேஸ்வரி  மலர் 


ஸ்ரீ சௌடேஸ்வரி பப்ளிகேஷன்                                          

54 - A, நாராயண நகர், குமாரபாளையம்.
நாமக்கல் மாவட்டம் - 638 183.
செல் : 740 22 33 444, 99427 10008

பொறுப்பாசிரியர்  
                                                         
திரு. S.S.M.P. இளங்கோ.
 தலைவர்
அனைத்திந்திய தேவாங்கர்
ஸ்ரீ சௌடேஸ்வரி  நற்பணி மன்றம்

ஆசிரியர் மற்றும் பதிப்பாளர்

திரு. R.B. ரவி ராமகிருஷ்ண குமார்


8 டிசம்பர், 2013

காஞ்சிபுர பட்டு, அஸ்சாமின் முகா பட்டு, கோசா சில்க் - நூல் உருவாகும் விதம்



                                                                             
                                                 
காஞ்சிபுரம் பட்டு

பட்டுப் புழுவின் கூடு ஒரே நூலால் உருவாக்கப் பட்டவை. ஒரு கூட்டில் 500 முதல் 1000 மீட்டர் நீளம் வரை பட்டு இழை இருக்கும். பட்டுப்புழு கூடு கட்டிய பத்து நாட்களுக்குள் கூட்டிலிருந்த நூலை பிரித்தெடுக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு பட்டுக் கூட்டின் உள்ளே இருக்கும் கூட்டுப் புழுவானது உருமாற்றம் அடைந்து அந்துப் பூச்சியாக கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும். இதனால் பட்டு இழை ஒரே நூலாக பிரித்தெடுக்க இயலாமல் போகும்.

3 டிசம்பர், 2013

அன்னிய கடவுள்கள்




திரு. ஸ்ரீசிவன் ஸ்வாமிகள் எழுதிய ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்ற புத்தகத்தில் இருந்து 

இந்த அகண்டம் முழுவதும் நிரம்பியிருப்பதும், எந்த விதமான உருவத்தையும் கொள்ளாததும், உலகத்தினரால் உணர முடியாததும், எந்த விதத்திலும் திருப்திகரமாக விவரிக்க முடியாததும், தெய்வங்களை ச்ருஷ்டிக்கும் மகத்தான சக்தியை கொண்டதுமான ஒர் பரம்பொருளை கடவுள் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. நமது உபநிதஷத்துகளைத் தவிர, அன்னிய மத புத்தகங்கள் இந்த உண்மையை அறியா.

1 டிசம்பர், 2013

சமூக கடமை





"தேவாங்க மகாஜோதி" தேவாங்க சமூக இதழ் தரும் தகவல்கள்

1928 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் உள்ள தேவாங்கர்களுக்காக, சென்னை வண்ணார பேட்டையிலிருந்து திரு. ஆர்.கோபால் அவர்களால் வெளியிடப் பட்டு வந்த தேவாங்கர் சமூக இதழான தேவாங்க மகாஜோதி இதழில் சமூக கடமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரை.
தேவலமத  தத்துவத்தின் படியும் ஏனைய சமய  நூற்களின் படியும்  ஒரு மனிதனுடைய ஆதர்ஸன ஜீவிய ஒளி சமூகத்தின் மத்தியிலேயே பிரகாசிக்கிறது.

17 நவம்பர், 2013

மாந்த்ரீகம் மற்றும் சித்து வேலைகள்.

                                                                          
                                                                            


திரு. ஸ்ரீசிவன் ஸ்வாமிகள் எழுதிய ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்ற புத்தகத்தில் இருந்து 



1. தூய மந்தரம்
2. மகேந்திர ஜாலம்
3. தீய மந்தரம்

போன்றவைகள் ஆதியிலிருந்தே சாஸ்திரங்களில் இருந்து வருகின்றன. தூயமந்திரத்தின் மூலம் ஆத்ம ஸஞ்சாரத்தையும், அற்புத சாதனைகளையும் புரிந்து வந்தனர். மகேந்திர ஜாலத்தின் மூலம் சிலர் அற்புத வித்தைகளையும், சிலர் வியக்கதக்க வித்தைகளையும் புரிந்து வந்தனர்.

9 அக்டோபர், 2013

உண்மையான பெண்ணின் தலையை வைத்து வணங்கும் மக்கள்




தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள.சித்தையன் கோட்டை,
இது  நெசவாளர்கள் வாழும் கிராமம் .

சித்தையன்கோட்டை இங்கு சஞ்சீவி சௌண்டம்மன் ஆலயம் உள்ளது இங்கு பலநூறு வருடம் முன்பு நடந்த உண்மை சம்பவத்தின் காரணமாக
அந்த கோவிலில் சிலை இல்லை  உண்மையான ஒரு பெண்ணின் சிரசு பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது !!!!

இந்த கோவில் தேவாங்கர் சமூகம் கப்பேலார் வங்குச தயாதிகளுக்கு பாத்தியப்பட்டது.இரண்டு வருடத்திற்கு ஒரு முறை  சிவராத்ரி  அன்று இரவு சிரசை வெளியில் எடுத்து வைத்து வழிபாடு நடத்துகிறார்கள்.

அதன் வீடியோ பதிவுகள் சில வருடங்கள் முன்பு  "நடந்தது என்ன?" என்ற நிகழ்ச்சியில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது அந்த வீடியோ தொகுப்பு கீழே கொடுக்க பட்டுள்ளது.

மேலும் இதன் விபரம் தெரிந்து கொள்வதற்காக  தேவாங்கர் பேஸ் புக் நண்பர்கள் ஆர்வத்துடன் பல ஊர்களை சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்து 27-2-2014 வியாழ கிழமை அன்று சித்தையன் கோட்டை சஞ்சீவி செளடம்மன் ஆலயம் சென்றிருக்கிறார்கள். பார்ப்பதற்கான அனைத்து உதவிகளையும் தேனி. செல்வன். வினோத் அவர்கள் செய்திருகிறார்கள்.

நேரில் பார்த்த விபரத்த செல்வன். பார்த்திபன் அவர்கள் விவரித்த விதம்:-


30 செப்டம்பர், 2013

திருப்பதி - தெரியாத தகவல்கள்...





திருப்பதி - தெரியாத தகவல்கள்...


திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில்சிலாதாரணம்என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்தப் பாறையிலிருந்து உருவாக்கப்பட்டதுதான்.

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு வருடம் முழுவதும் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இது ஒருவகை ரசாயனப் பொருள். அரிப்பைக் கொடுக்கக் கூடியது. இதை ஒரு கருங்கல் மீது தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணப் பாறைகளில் தடவினால் அவை வெடிப்பதில்லை.

26 செப்டம்பர், 2013

தஞ்சை பெரிய கோவில்- நம்ப முடியாத தகவல்கள்





தஞ்சை பெரிய கோவில்

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் 

நீளமும்அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு

கன்னட மொழி



கர்நாடக மாநிலம், மராத்தி நாட்டின் தென் பகுதியில் பேசப்படும் மொழி
கன்னட மொழி ஆகும். கருநாடகம் என்றும், கானரிஸ் என்றும் கூறுவர். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் கன்னட மொழி பேசுகின்றனர்.

  கர்நாடகம் என்னும் வடசொல் திரிந்து, கன்னடம் என்றானது என்பர் வடநூலார். ‘கன்னடம்என்பதுதிராவிடச் சொல்என்பார் டாக்டர் குண்டர்ட். கன்னடத்தில், பழங்கன்னடம், புதுக் கன்னடம் என்னும் இரு வகை உள்ளன. புதுக் கன்னடத்தின் எழுத்து முறை தெலுங்கு மொழியின் எழுத்து முறையை ஒட்டி அமைந்துள்ளது என்பார் .எஸ். ஆச்சார்யா. அவர் பல ஆய்வுகள் செய்துள்ளார்.

  எச்.எஸ். பிலிகிரி (H.S. Biligiri) கன்னட மொழியின் ஒலியன்களைப் பற்றி ஆராய்ந்துள்ளார். கன்னட மொழியின் வட்டார வழக்குகளில் ஒன்று தேவாங்கா கன்னடம் ஆகும்.

24 செப்டம்பர், 2013

தேவாங்கர் குல மக்களுக்கு




        ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை 


ஜெய் தேவாங்கா…….. ஜெய் ஜெய் தேவாங்கா.

தேவாங்கர் குல மக்களுக்கு வணக்கம்.

நம் தேவாங்கர் குல அன்னை ஸ்ரீசௌடேஸ்வரி அம்மனை சில ஏரியா மக்கள் வீட்டில் வைத்து கும்பிடுகிறார்கள், பல ஏரியா மக்கள் வீட்டில் வைத்து கும்மிடுவதற்கு அனுமதிப்பது இல்லை. நாங்கள் செளடேஸ்வரி அம்மனை அனைவரும் வீட்டில் வைத்து கும்பிடுவதற்கு முயற்சி எடுக்கலாம் என்று நினைத்து அதை பற்றி பேஸ் புக் மூலம் சர்வே எடுத்தோம். பலரும் பல விதமான கருத்துக்களை கூறியிருந்தீர்கள். அதை பற்றி நம் குல முக்கியஸ்தர்களிடம் கேட்கலாம் என்று முகவரி கேட்டிருந்தோம். அனைவரும் அளித்தீர்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று பெரியோர்களிடம் விசாரித்தோம். அதில் கிடைத்த தகவலை தங்களுக்கு தருகிறோம்.

ஒவ்வொரு ஏரியாக்களிலும் வெவ்வேறான நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் இருக்கின்றன.
உதாரணமாக‌-  

21 செப்டம்பர், 2013

அணுகுண்டு தாத்தாவின் சொற்பொழிவுகள்

                                                 பள்ளிகளில் அணுகுண்டு தாத்தா மாணவர்களுக்குக்
கூறிய கருத்துக்களின் சுருக்கம் :-   

                        

திரு.  M.K.Soundappan  [அணுகுண்டு தாத்தா]
திருமதி. S.Valliyammal
சின்னவதம்பசேரி

Address : Anugundu Thatha,
(Atombombgrandpa)
3, Thirumurugan Nagar,
Maruthamalai Main Road,
Vadavalli, Coimbatore –  641 041
Tamilnadu, India
Phone : 0422-2424012, Cell : 93677 34813.


பாகம் - 1


 இந்த நல்ல நாளிலே உங்கள் மத்தியில் தேசபக்தி-தெய்வபக்தி என்னும் தலைப்பில் உரையாற்றுகிறேன்.

1 செப்டம்பர், 2013

நெசவாளர் இனங்கள்/ Weavers

               

ஆடை :- மனிதன் மாறுபட்ட தட்ப வெப்ப நிலையிலிருந்து.தன் உடலை பாதுகாக்க நினைத்த போது உடை தோன்றியுள்ளது.

    முதலில் இலைத் தலைகளையும், பின் மிருக தோல்களையும் பயன்படுத்தி உள்ளான். சிவபெருமானை தோல் ஆடையுடன் சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியத்தை இப்பொழுதும் காணமுடிகிறது.

    முந்தய காலத்தில் மனிதர்கள் நீண்ட முடியை வளர்த்துள்ளனர். பின் அதில் பின்னல்களை பின்னியுள்ளனர். அதன் வலிமையை பார்த்து கயிறு செய்வது உருவாகியிருக்கிறது. இதுவே நெசவு தொழிலுக்கு காரணகர்த்தாவாக அமைந்தது.

    ஆட்டின் ரோமத்திலிருந்து கம்பளி தயாரிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சணல், பட்டுபூச்சி ஆகிய வற்றால் நெசவு தொழில் வளர்ந்துள்ளது. விவசாய தொழிலுக்கு முற்பட்டதாக நெசவு தொழில் இருந்துள்ளது.

13 மே, 2013

முக்கிய செய்திகள்


இந்த பக்கத்தில் உள்ள செய்திகள்:-

                                                                               

   1. திருடு போன  செல் போனை மீட்க                     

 2. ஆலயங்களில் செய்யத் தகாதவை..

 3. ரக்ஷாபந்தன்-பூணூல் 

 4. நமஸ்காரங்களும் செய்யும் முறையும்...

  5.  மகாளய அமாவாசை 

   

28 ஜனவரி, 2013

எங்கே கடவுள்?....மதத்திலா....இயற்கையிலா...



 இது கடவுள் தேடல் உள்ளவர்களுக்காக. அவர்களுக்கு தேவையான விளக்கங்கள் இதில் கிடைத்தாலும் கிடைக்கலாம்.  கேள்வி, பதில் பாணியில் கொடுக்க  பட்டுள்ளது. பல ஆண்டுகளாக எனக்கு விடை தெரியாமல் பலரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு  தற்பொழுது அதன் விடைகளை உணர்ந்ததால்.எழுத பட்டதே இது.



 கடவுள் தேடல் உள்ளவர் :  கடவுள் இருக்கிறார்  என்றால்  கடவுளை காட்ட முடியுமா?... ....நான் பார்க்க வேண்டும்........ எங்கே இருக்கிறார்........ சொல்லுங்கள்..................

27 டிசம்பர், 2012

தேவாங்கர் குல வரலாறு -முதல் பகுதி


 நமது இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும், ஒவ்வொரு மரபினருக்கும் அவர்களது வம்சாவழியைக் குறித்து ஆன்றோர்களால் செய்யப் பெற்ற புராணங்கள் ஆங்காங்கு ஒளிர்கின்றன. அவர்களது தோற்றங்கள் யாவும் கடவுளர்களை ஆதியாகக் கொண்டே தொடங்குகின்றன.  அந்த முறையிலேயே இத்தேவாங்க புராணமும் அமைகின்றது.

 இந்த தேவாங்க புராணம் வடமொழியில் உள்ள பிரமாண்ட புராணத்தில் முதன் முதலில் தோன்றுவதாயிற்று.  அதனை ஆதியாகக் கொண்டு காலப்போக்கில் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய பல்வேறு மொழிகளில் இப்புராணம் தோன்றி வளர்வதாயிற்று.
  
 பதினெண் புராணங்களில் ஒன்றான பிரமாண்ட புராணத்தின் உத்தரகாண்டத்தில் தேவாங்கபுராணம் என்னும் பகுதி காணப்படுகிறது அதன் சுருக்கம்

              தேவாங்கர்களின்  முதல் வித்தான தேவலர் தோற்றம் 

 தேவர்களின் வேண்டுகோளின் படி அனைவருக்கும் ஆடைகள் தயாரித்துக் கொடுப்பதற்காக  சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து (இதயக்கமலத்திலிருந்து என்றும் சொல்வர் ) தேவலரை தோன்ற செய்தார் (பின்னாளில் தேவாங்கன் என்று பெயர் பெற்றார்) சிவபெருமான்  அவரிடம் நீ திருமாலிடம் சென்று அவரிடம் உள்ள உந்திகமல நூலை பெற்று ஆடைகள் நெய்து அனைவருக்கும் அளிப்பாயாக மேலும்  நீ  ஆமேதநகருக்கு சென்று ஆட்சி செய்து கொண்டிருப்பாயாக  என்று அருளினார்.

           தேவாங்கர்களின் குல தெய்வமான சௌடேஸ்வரி தோற்றம் 
.
 தேவலர் சிவபெருமான் ஆணைப்படி ஸ்ரீ நாராயணணிடம் சென்று அவரிடம் நுழை பெற்று வந்துகொண்டிருந்தார் .வரும் வழியில் அசுரர்கள் அவரிடம் இருந்து நுழை அபகரிக்க எத்தனித்தனர். இதனால் அங்கு ஒரு பெரிய போர் ஏற்பட்டது  தேவலர் ஶ்ரீ நாரயண் கொடுத்த சக்கர ஆயுதத்தால் அவர்களிடம் போராடிப் பார்த்தார் அவர்களை வெட்டவெட்ட  சிந்திய இரத்தத்திலிருந்து எண்ணில் அடங்கா அசுரர்கள் தோன்றி போரிட்டனர்.  ஏதாவது ஆபத்து என்றால் என்னை அழை  என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்த அன்னை பரமேஸ்வரியை தேவலர்  எண்ணி துதித்தார்.